கைலாயமாலையில் குறிப்பிடப்படும் யாழ்ப்பாண ராசதானியாகிய நல்லூரின் வளம்

2012-04-30 16:57:01


  Share
 
 
 

தென்மதுரை விட்டுத் திருநகர்யாழ்ப் பாணத்து
மன்னரசு செய்ய மனமகிழ்ந்து-மின்னொளிசேர்

வெங்கதிரைக் கண்டு விரிந்துகளி கொண்டலர்ந்த
செங்கமலங் கூம்பத் திசையிருண்டு-கங்குல்வரச்

சங்கினங்கள் ஈன்ற தரளத்தைச் சந்தரனெனப்
பொங்குங் குமுதம் பொதியவிழிப்பப்- பொங்கருறு

பூவின் மூசநிறை யும்புனலில் வாழ்கயல்கண்
மேவியவளர் பூக மிடறுடைப்பத் -தாவும்

வெங்கதிர் - சூரியன்.
கூம்ப - சுருங்க, சூரியனைக் கண்டு அலர்ந்த தாமரை திசை இருண்டு இரவு வரச் சுருங்கலாயிற்று, கங்குல் இரவு. 
சங்குக் கூட்டங்கள் ஈன்ற முத்தின் ஒளியை நிலவொளியென்று குமுதம் அலர்ந்தது.
பொங்கர் - சோலை.
பூவில் அளிமூச - பூவில் வண்டுகள் ரீங்காரம் செய்ய, 
புனலில் வாழ் கயல்கள் - நீரில் வாழும் கயல் மீன்கள். 
பூகமிடறு உடைப்பத் தாவும் - கமுகின் கழுத்தைக் கீறப்பாயும். 
கயல் மீன் குதித்துக் கழுகின் கழுத்திலுள்ள மடலைக் கீறப் பாளை விரியும்.

முத்தராச கவிராசர் இயற்றிய கைலாயமாலையில் நல்லூரின் வளம் மெற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video