|
|||||||||||
|
தெல்லிப்பழையில் அமெரிக்கமிஷனால் தாபிக்கப்பட்ட ஆங்கிலக் கலாசாலையிலே ஆங்கிலம் சில ஆண்டுகள் கற்றபின் வட்டுக்கோட்டையிலே அம் மிஷனால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வசாஸ்திர கலாசாலையிலும் எட்டாண்டுகள் வரையிற் கற்றவர். கோப்பாயில் இருந்த போதனா வைத்தியசாலையில் சில காலம் ஆசிரியராக இருந்து பின்பு சென்னையில் பார்சிவல் துரையால் நடாத்தப்பட்ட ~தினவர்த்தமானி|ப் பத்திரிகைக்கு அதிபராய் அங்கு சென்று சிலகாலம் அதனை நடத்தியவர். சென்னை சர்வகலாசாலையிலே பீ.ஏ. பரீட்சையிற் சித்தி எய்தியபின் கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலையிலே ஆசிரியராக இருந்தவர். சென்னை அரசாட்யாரால் அளிக்கப்பட்ட 'ராவ்பகதூர்' என்னும் சிறப்புப் பெயரும் பெற்றவர். புதுக்கோட்டையில் பெருமன்றத்து நீதிபதி உத்தியேகமும் வகித்து நடாத்தியவர். சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சகராகவுமிருந்தார். இவர் பரிசோதித்து அச்சிட்ட தமிழ் நூல்களாவன: தொல்காப்பியம், எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை, ஐந்தியல் நச்சினார்க்கினியருரையும் ஏனைய பேராசிரியருரையுமாயுள்ள பொருளதிகாரவுரை, இறையனாராகப்பொருளுரை, இலக்கண விளக்கவுரை, வீரசோழியவுரை முதலிய இலக்கண நூல்களும், சூளாமணி, தணிகைப் புராணம் முதலிய இலக்கிய நூல்களுமாம். ஆறுமுகநாவலரால் பரிசோதிக்கப்பட்ட தொல்காப்பியத்துச் சொல்லதிகாரம் சேனாவரையருரையும் இவராலேயே பதிக்கப்பட்டது. இவர் இயற்றிய நூல்கள் சைவ மகத்துவம், கட்டளைக் கலித்துறை, சூளாமணி வசனம் முதலியனவாகும்.
|
|||||||||||