நல்லூர் உற்சவத்தில் சிறப்பு நிகழ்வுகள்

2012-07-28 10:33:12


  Share
 
 
 

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தினால் ஆன்மிகச் சிந்தனையுடன் கூடிய சிறப்புச் சொற்பொழிவு நேற்று வெள்ளிக்கிழமை (27.07.2012) , இன்று சனிக்கிழமை (28.07.2012) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (29.07.2012) ஆகிய தினங்களில் ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

இச் சிறப்புச் சொற்பொழிவுகள் முறையே இளம் சொற்பொழிவாளர் தி.பகிர்தரனின் புலவர் போற்றிடும் புலவர், ஈஸ்வரனின் நக்கீரரும் திருமுருகாற்றுப்படையும், சைவப் புலவர் கந்த சத்தியதாசனின் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே என்னும் தலைப்புக்களில் நிகழ்த்தவுள்ளனர்.

தொடர்ந்து இளவாலை, ஆவரங்கால், காரைநகர், புத்தூர், சங்கானை, திடற்புலம், கோண்டாவில் ஆகிய இடங்களின் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நல்லூர் முருகன் ஆலய உற்சவ காலத்தையொட்டி நல்லூர் இளம் கலைஞர் மன்றம் நல்லூரில் அமைந்துள்ள தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் ஆதரவுடன் துர்க்கா மணிமண்டபத்தில் நடத்தும் தெய்வீக இசையரங்கின் 4 ஆம் நாள் நிகழ்வாக நேற்று (27.07.2012) வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு பிரம்மஸ்ரீ விஸ்டவ பிரசன்னாவின் பாட்டுக்கச்சேரி நடைபெற்றது.


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video